திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிலைகள் காணாமல் போன வழக்கில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு 2 மாதம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் மனுதாரருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அரசு தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.