சென்னையில் மீன் விலை சரிவு

புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து சென்னையில் மீன் விலை குறைந்து வருகிறது.

புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து சென்னையில் மீன் விலை குறைந்து வருகிறது.
 ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முழுவதும் இந்துக்களில் பெரும்பாலோர் அசைவ உணவைத் தவிர்த்து விடுவது வழக்கம். இவ்வாண்டு கடந்த 17-ஆம் தேதி புரட்டாசி மாதம் தொடங்கியது. இதையடுத்து பெரும்பாலானோர் அசைவ உணவைத் தவிர்த்து வருவதால் மீன், இறைச்சி போன்றவற்றின் விற்பனை குறைந்து அவற்றின் விலை சரிந்து வருகிறது.
 வஞ்சிரம் மீன் விலை சற்று குறைந்து கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த மாதம் ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று மேலும் சில வகை மீன்கள் கிலோ ரூ.50 முதல் 200 வரை குறைந்துள்ளன. சங்கரா ரூ.150-க்கும், கட்லா ரூ.200-க்கும், சுறா ரூ.350-க்கும், இறால் ரூ.300-க்கும், நண்டு ரூ. 250-க்கும், வவ்வால் ரூ.500-க்கும் ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com