தென்காசி, குற்றாலம் பகுதிகளில் திடீர் மழை: பேரருவியில் தண்ணீர்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த திடீர் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது.
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் திடீர் மழை: பேரருவியில் தண்ணீர்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த திடீர் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது.
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. 
இந்நிலையில், சனிக்கிழமை மாலையில் இப்பகுதிகளில் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. மேலும், குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பேரருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது. இதனையடுத்து, தென்காசி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேரருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com