திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (பிப்.23) தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் காணாமல்போய் இதுவரை எங்கிருக்கிறார் என தெரியவில்லை.
கருத்துரிமையை நசுக்கும் மத்திய மாநில ஆட்சியில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் அவரை மீட்க வேண்டும். அதுவரை சந்தேகம் உங்கள் மீதே! என்று தெரிவித்துள்ளார்.