பொள்ளாச்சி: துரோகத்தின் கூடாரமாகவே கோடநாடு மாறிவருகிறது என்று மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல், மக்களிடம் பெற்றதைத்தான் இலவசத் திட்டமாக செயல்படுத்துகிறார்கள். இலவசப் பொருட்களை யாரும் தங்கள் பாக்கெட்டில் இருந்து எடுத்துத் தருவதில்லை. உயர்கல்வி, சுகாதாரத்தை இலவசமாகத் தரவே தயாராகி வருகிறேன்.
தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவெடுக்க வேண்டும். மக்கள் முன்வைக்கும் பிரச்னைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். தில்லியை தவிர்த்துவிட்டு தனியாக அரசியல் செய்து விட முடியாது என்று கூறியுள்ளார்.