தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
உழவுக்கு பெரிதும் உதவும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நன்னாளான பொங்கல் பண்டிகையை நேற்று தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இன்று உழவுக்கு உதவும் மாடுகளைக் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் பழனிசாமி தனது சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினார். அதன்படி, சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம், தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையினை பொதுமக்களோடு இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார்.
சிலம்பாட்டத்தைத் தொடங்கி வைத்து, சிலம்ப வீராங்கனைகளோடு சிலம்பம் விளையாடினார்.
மாடுகளுக்கு உணவளித்து மகிழ்ந்த போது..