தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மூடுபனி

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மூடு பனி காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மூடு பனி காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மூடுபனி காணப்படும். இதுதவிர, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை  (ஜன. 20) முதல் புதன்கிழமை (ஜன.23) வரை வறண்ட வானிலையே நிலவும். நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு உறைபனி காணப்படும். சென்னையில் வானம் தெளிவாக இருக்கும். அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com