சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது
சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக அவ்வப்போது கண்ணாடி கதவுகள் உடைந்து விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திங்களன்று 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது
விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அமைந்துள்ள 17-வது நுழைவு வாயிலில் கண்ணாடி கதவு உடைந்து இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.