எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.50 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முன்னதாக சட்டப்பேரவையில், தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com