பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்

 பிளஸ் 2 பொதுத் தேர்வு  செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.  வரும் ஏப்.19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.


 பிளஸ் 2 பொதுத் தேர்வு  செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.  வரும் ஏப்.19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
தமிழக பள்ளி கல்வித் துறையின் சமச்சீர் பாடத் திட்டத்தின்படி பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கணிதம், விலங்கியல், வணிகவியல், வேதியியல் ஆகிய சில பாடங்களைத் தவிர மற்றவை எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.  இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவியர் எழுதினர்.  
இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com