'என்ன டாக்டர். என்டோஸ்கோப் பண்றதா சொல்லிட்டு சட்டை பாக்கெட்டில் கையை வைக்கறீங்க?'
'உள்ளே என்ன இருக்குன்னு பார்க்கறதுதானே என்டோஸ்கோப்..'
-பண்ருட்டி பரமசிவம்.
'ஏன் டாக்டர்.. மாத்திரைகளை நடுராத்திரியில் சாப்பிட சொல்றீங்க?'
'உங்களுக்குத் தூக்கத்துல மருந்து சாப்பிடுற வியாதி இருக்குன்னு சொன்னீங்களே.. அதுக்குதான்'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'என்ன மேடம். உங்க பையனுக்கு பல் வலின்னு சொன்னீங்க. செக் பண்ணா ஒன்னுமே இல்லையே..?'
'டாக்டர்.. சாரி ... நான் ஐந்தாவது பையனுக்குப் பதிலாக ஆறாவது பையனைக் கூட்டிட்டு வந்துட்டேன்..'
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
'கடி ஜோக் சொன்னதுக்கே இவர் மயக்கம் போட்டு விழுந்துட்டாரா..?'
'ஆமாம் டாக்டர். சொன்னது விஷக்கடி ஜோக்..'
-எம்.பி.தினேஷ், கோவை-25.
'செத்துப் போன பேஷன்ட் மீண்டும் உயிர் பிழைச்சிட்டாரா? நர்ஸ் என்ன சொல்றீங்க..?'
'ஆமாம் டாக்டர். ஓ.டி.பி. நம்பர் வர்றலன்னு திருப்பி அனுப்பிட்டாங்கன்னு பேஷன்ட் சொல்றாரு..?'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
'மருந்து கசப்பா இருக்கு.. கண்ணை மூடிட்டு குடிங்க..?'
'கண்ணைத் திறந்து குடிக்கிற மாதிரி இனிப்பான மருந்தே குடுங்களேன் டாக்டர்...'
'இந்த டாக்டருக்கு ஏழு மணிக்கு மேல் கண் தெரியாதுன்னு யார் சொன்னாங்க..?'
'கிளினிக்கில் பார்வை நேரம் மாலை 6-7 மணின்னு எழுதியிருக்குதே..'
-அ.செந்தில்குமார், சூலூர்.
'டாக்டர்.. ஆபரேஷன் பண்ணிக்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு..'
'நீங்க மட்டுமா? எனக்கும்தான் பயமாக இருக்கு. ரெண்டு பேரும் பயந்தா எப்படி?'
'என்ன டாக்டர்.. எனக்கு சுகர் 400 இருக்குன்னு நர்ஸ் சொல்றாங்க? நீங்க ஐநூறுன்னு சொல்றீங்க..?'
'நான் சொன்னது பீஸ்...'
-வி.சாரதி டேச்சு, சென்னை-5.
'நர்ஸ்.. இது இடிச்ச காயமில்லை. அடிச்ச காயமுன்னு டாக்டர் எப்படி சொல்றாரு.?'
'எல்லாம் ஓர் அனுபவம்தான்...'
'மாமியாருக்கு காலில் சின்ன முள்தானே குத்திருக்கு. அதுக்கு ஏன் ஆபரேஷன் பண்ண சொல்றீங்க..?'
'முள்ளை ஊசியில் எடுக்கப் போனேன். அது முறிஞ்சு போயி செப்டிக் ஆகி காலையே எடுக்கற மாதிரி ஆனா என்ன பண்ணுறது டாக்டர் அதான்..'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.