ஒரு டம்ளரில் தண்ணீரை நிரப்பி வைத்து ஒரு தமிழரைப் பார்த்து டம்ளரில் என்ன இருக்கிறது என்று கேட்டால் "தண்ணீர்' என்று சொல்வார்.
தெலுங்கரைக் கேட்டால் "நீளு' என்பார்.
மலையாளியைக் கேட்டால் "வெள்ளம்' என்பார்.
இந்திக்காரரைக் கேட்டால் "பாணி' என்பார்.
கன்னடக்காரரைக் கேட்டால் "நீரு' என்பார்.
ஆங்கிலேயரைக் கேட்டால் "வாட்டர்' என்பார்.
டம்ளரில் இருக்கும் பொருள் ஒன்றுதான், ஆனால் அதற்கு இத்தனை பெயர்கள். அதுபோலத்தான் கடவுள் ஒருவராக இருந்தாலும், சைவருக்குச் சிவனாகவும், வைணவருக்கு பெருமாளாகவும், கிறிஸ்தவருக்கு ஏசுவாகவும், இஸ்லாமியருக்கு அல்லாவாகவும், சீக்கியருக்கு குருநானக்காகவும், ஜைனர்களுக்கு மகாவீரராகவும் விளங்குகிறார்கள்.
("மனதை சுட்டதும், தொட்டதும்' என்னும் நூலில் து.சு.இராமையா)
- முக்கிமலை நஞ்சன்