ஒரு சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும் குத்துகாலிட்ட நிலையிலும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, கடலூர் அருகில் அமைந்துள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்து தவக்கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் காட்சி தருகின்றனர்.