நமது திருக்கோயில்களில் தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் கல்லால மரத்தடியில் வீற்றிருப்பார். ஆனால் ராஜபாளையத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் சங்கரன்கோவில் செல்லும் வழியில் உள்ள தாருகாபுரம் என்னும் கிராமத்தில் உள்ள சிவன்கோயிலில் தட்சிணாமூர்த்தி நவக்கிரகங்கள் மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
இதேபோன்று, மயிலாடுதுறை- திருவாரூர் செல்லும் வழியில் உள்ள பூந்தோட்டம் எனும் ஊரில் உள்ள பழைமையான சிவன்கோயிலில் தட்சிணாமூர்த்தி நவக்கிரகங்களை உள்ளடக்கிய லக்கினங்களின் மீது அமர்ந்துள்ளார். நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கப் பெறுவர்.