பதவியைத் துறக்கிறார் சீன கத்தோலிக்க தலைவர்

சீனாவில் போப் ஆண்டவரால் நியமிக்கப்பட்ட  கத்தோலிக்க மதத் தலைவர் குவோ ஷிஜின் , தனது பதவியைத் துறக்க முடிவு செய்துள்ளார்.

சீனாவில் போப் ஆண்டவரால் நியமிக்கப்பட்ட  கத்தோலிக்க மதத் தலைவர் குவோ ஷிஜின் , தனது பதவியைத் துறக்க முடிவு செய்துள்ளார்.
சீனாவில் கத்தோலிக்க மதத் தலைவரை அந்த நாட்டு அரசே நியமித்து வருகிறது. எனினும் இதற்கு எதிராக ஃப்யூஜியான் மாகாணத்தில் தனி கத்தேலிக்க அமைப்பு இயங்கி வருகிறது. அந்த அமைப்புக்கான தலைவர்களை கத்தோலிக்கர்களின் தலைமையகமான வாடிகன் நியமித்து வருகிறது. 
இதனால், வாடிகனுக்கும், சீன அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், சீன அரசுடன் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அரசு நியமிக்கும் கத்தோலிக்க தலைவரை ஏற்க போப் ஆண்டவர் சம்மதித்தார்.
அதன் அடுத்தக் கட்டமாக, வாடிகனால் நியமிக்கப்பட்ட கத்தோலிக்க தலைவர் குவோ ஷிஜின் தற்போது பதவி விலகுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com