ஊழல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள 7 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து, வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அக்டோபரில் வழங்கப்பட்ட அந்தத் தண்டனைக்கு எதிரான அந்த மனு டாக்கா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.