ஆஸ்திரேலிய அங்காடிகளில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டிராபெரி உள்ளிட்ட பழங்களில் மர்ம நபர்கள் மெல்லிய ஊசிகளை சொருகி வைத்து, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவது பயங்கரவாதத்துக்கு இணையானது என்று அந்த நாட்டுப் பிரதமர் மோரிஸன் சாடியுள்ளார்.
மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.