தானியங்கி துப்பாக்கிகளுக்கு தடை: நியூஸி. பிரதமர் அதிரடி

தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை நியூஸிலாந்தில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி துப்பாக்கிகளுக்கு தடை: நியூஸி. பிரதமர் அதிரடி

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில், 28 வயது நபர் கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
 இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 5 இந்தியர்கள் உள்பட 50 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறுகையில், 

துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தரும் வகையில், அவர் மீது முழுவீச்சில் சட்டப் பிரயோகம் செய்யப்படும். அவர் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி, இன வெறியர். அதைத் தவிர அவருக்கு வேறு பெயரில்லை என்றார்.

மேலும், ராணுவ வகை தானியங்கி மற்றும் உயர் ரக குண்டுகள் அடங்கிய தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை நியூஸிலாந்தில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com