5 பொதுத் துறை வங்கிகளுக்கு புதிய நிர்வாக இயக்குநர்கள்

5 பொதுத் துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர் பணியிடங்களுக்கான பெயர்களை வங்கி வாரியக் குழு (பி.பி.பி.) பரிந்துரை செய்துள்ளது.

5 பொதுத் துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர் பணியிடங்களுக்கான பெயர்களை வங்கி வாரியக் குழு (பி.பி.பி.) பரிந்துரை செய்துள்ளது.
2017-18-ஆம் நிதி ஆண்டில் 5 பொதுத் துறை வங்கிகளில் நிர்வாக இயக்குநர் பணியிடங்கள் காலியாகவிருக்கின்றன. அந்தப் பணியிடங்களை நிரப்பும் வகையில் முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) வினோத் ராய் தலைமையிலான வங்கி வாரியக் குழு தகுதியான விண்ணப்பதாரர்களுடன் நேர்காணல் நடத்தியது.
அதன் அடிப்படையில், தற்போது பல்வேறு வங்கிகளில் செயல் இயக்குநர்களாகப் பணிபுரிந்து வரும் சுனில் மேத்தா, தீன பந்து மொஹபத்ரா, ராஜ்கிரண் ராய், ஆர்.ஏ. சங்கர நாராயணா மற்றும் ஆர்.சுப்ரமணியகுமார் ஆகியோரை வங்கிகளின் நிர்வாக இயக்குநர் & தலைமைச் செயல் அதிகாரி பணியிடங்களுக்கு நியமிக்க பி.பி.பி. பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசு இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கும் என்று அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுத் துறை வங்கிகளில் இயக்குநர்களை நியமிக்கவும், நிதி திரட்டும் வழிமுறைகளுக்கு ஆலோசனை வழங்கவும், வங்கித் துறையில் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு கடந்த ஆண்டு வங்கி வாரியக் குழுவை அமைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com