பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்கி நிதி திரட்டுவதில் காப்பீட்டு நிறுவனங்கள் மும்முரமாகியுள்ன. இதனை மெய்ப்பிக்கும் விதமாக மூன்று வாரங்களுக்கும் குறைவான கால இடைவெளியில் ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்ட் லைஃப், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய 3 காப்பீட்டு நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு செபியின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. இதன் மூலம், இந்த நிறுவனங்கள் சுமார் ரூ.20,000 கோடியை திரட்ட உள்ளன.