பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதோர் பட்டியலில் 27 சதவீத பங்களிப்புடன் பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்தில் உள்ளது. கடந்த மார்ச் 31 நிலவரப்படி 1,762 பேர் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத தொகை ரூ.25,104 கோடியாகும். இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1,120 பேர் கடன்பெற்று ரூ.12,278 கோடியை திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர்.