பூர்விகா மொபைல்ஸ், பஜாஜ் பைனான்ஸுடன் இணைந்து கடன் தவணை அட்டையான இஎம்ஐ அட்டையை வெளியிடுவதாக அறிவித்தது.
இதுகுறித்து பூர்விகா மொபைல்ஸ் தலைமை செயல் அதிகாரி யுவராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: பஜாஜ் நிறுவனம்-பூர்விகா மொபைல்ஸ் இணைந்து வெளியிடும் கடன் தவணை (இ.எம்.ஐ.) அட்டையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய நுகர்வோர் சாதனங்களை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள எந்த கடையிலும் வாங்க முடியும்.
பூர்விகாவில் ரூ.15,000 மற்றும் அதற்கும் அதிக மதிப்பிலான செல்லிடப்பேசிகளை ரொக்கம் அல்லது கடன் அட்டையைப் பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இஎம்ஐ அட்டை வழங்கப்படும். இதனை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் ரூ.30,000 பெருமானமுள்ள நுகர்வோர் சாதனங்களை மாதத் தவணையில் வாங்க முடியும் என்றார் அவர்.