வர்த்தகம்
கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடி திரட்டுகிறது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தேவையான மூலதனம் ரூ.500 கோடியை பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்களை வெளியிட்டு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முறையான ஒப்புதல் மார்ச் 2-ஆம் தேதி நடைபெற உள்ள நிறுவனத்தின் புதிய நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பெறப்பட உள்ளது என்று டாடா
மோட்டார்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.