சுந்தரம் ஃபைனான்ஸ் லாபம் 35% உயர்வு

சென்னையைச் சேர்ந்த வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸ் மூன்றாம் காலாண்டு லாபம் 35.2 சதவீதம் அதிகரித்தது.
சுந்தரம் ஃபைனான்ஸ் லாபம் 35% உயர்வு

சென்னையைச் சேர்ந்த வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸ் மூன்றாம் காலாண்டு லாபம் 35.2 சதவீதம் அதிகரித்தது.
 இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
 நடப்பு 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் சுந்தரம் ஃபைனான்ஸ் வருவாய் ரூ.598.12 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.590.67 கோடியாக காணப்பட்டது.
 நிகர லாபம் ரூ.102.18 கோடியிலிருந்து 35.2 சதவீதம் அதிகரித்து ரூ.138.24 கோடியாக காணப்பட்டது.
 நடப்பு நிதி ஆண்டின் டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாத கால அளவில் செயல்பாடுகள் வாயிலான வருவாய் ரூ.1,730.08 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,747.64 கோடியாக இருந்தது என்று சுந்தரம் ஃபைனான்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com