ரூ.50 லட்சம் கோடி ஏற்றம் கண்ட பங்குகளின் சந்தை மதிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
ரூ.50 லட்சம் கோடி ஏற்றம் கண்ட பங்குகளின் சந்தை மதிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
டாடா, பிர்லா, அம்பானி மற்றும் பஜாஜ் குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பு தலா ரூ.1 லட்சம் கோடி ஏற்றம் கண்டுள்ளது. முகேஷ்
அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடி அதிகரித்து ரூ.4.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதேபோன்று, அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பும் 30 சதவீதம் அதிகரித்து ரூ.1.1 லட்சம் கோடியையும் தொட்டுள்ளது.
பங்குகளின் சந்தை மதிப்பின் ஒட்டுமொத்த ஏற்றமான ரூ.50 லட்சம் கோடியில் பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 22 சதவீதம் அல்லது ரூ.3.65 லட்சம் கோடியாகமட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com