ஐசிஐசிஐ லொம்பார்டு பங்கு வெளியீடு செப்.15-இல் தொடக்கம்

தனியார் துறை நிறுவனமான ஐசிஐசிஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் பொதுப் பங்கு வெளியீடு செப்டம்பர் 15-இல் தொடங்குகிறது.

தனியார் துறை நிறுவனமான ஐசிஐசிஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் பொதுப் பங்கு வெளியீடு செப்டம்பர் 15-இல் தொடங்குகிறது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு வியாழக்கிழமை அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
விரிவாக்கத் திட்டங்களுக்குத் தேவையான நிதியை திரட்ட ஏதுவாக பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்க செபி அண்மையில் அனுமதி அளித்தது. இதையடுத்து ஐசிஐசிஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. பங்கு விலை நிர்ணயம் குறித்து பொதுப் பங்கு வெளியீடு தொடங்குவதற்கு ஐந்து வேலை நாள்களுக்கு முன்னதாக விளம்பரத்தின் வாயிலாக அறிவிக்கப்படும் என்று ஐசிஐசிஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
ஐசிஐசிஐ லொம்பார்டு ரூ.10 முகமதிப்பு கொண்ட 8,62,47,187 பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.6,000 கோடியை திரட்டத் திட்டமிட்டுள்ளது. 
பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனமொன்று பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்கி நிதி திரட்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com