இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டன.
உள்நாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு செய்தனர். குறிப்பாக, வங்கி, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி குவித்தனர்.
சர்வதேச சந்தைகளை பொருத்தவரை பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்ந்து 37,947 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 85 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமாக 11,470 புள்ளிகளில் நிலைகொண்டது.