ஆக்ஸிஸ் வங்கி இயக்குநர் குழுவில் அமிதாப் சவுத்ரி

ஆக்ஸிஸ் வங்கியின் இயக்குநர் குழுவில் அமிதாப் சவுத்ரியை கூடுதல் இயக்குநராக நியமிக்க அந்த வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

ஆக்ஸிஸ் வங்கியின் இயக்குநர் குழுவில் அமிதாப் சவுத்ரியை கூடுதல் இயக்குநராக நியமிக்க அந்த வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
 இதுகுறித்து அந்த வங்கி செபி-க்கு தெரிவித்துள்ளதாவது: ஆக்ஸிஸ் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், அமிதாப் சவுத்ரியை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சமீர் பரூவா, சோம் மிட்டல் மற்றும் ரோஹித் பகத் ஆகியோரை மீண்டும் தனிப்பட்ட இயக்குநர்களாக மறுநியமனம் செய்யவும் இயக்குநர் குழு அனுமதியளித்துள்ளது என ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
 தற்போது ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவுள்ள ஷிகா சர்மாவின் பதவிக் காலம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அமிதாப் சவுத்ரி அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து அந்தப் பொறுப்புகளை ஏற்கவுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com