ஏர்இந்தியாவின் செயல்பாட்டு லாபம் கடந்த நிதி ஆண்டில் இருமடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
ஏர்இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிதி நிலைமை மற்றும் செயல்பாடு நிலையான அளவில் மேம்பட்டு வருகிறது. இதற்கு, மத்திய அரசு செயல்படுத்திய சிறப்பு திட்டங்களே முக்கிய காரணம். கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில் அந்த நிறுவனம் செயல்பாட்டு லாபமாக ரூ.105 கோடியை மட்டுமே ஈட்டியிருந்த நிலையில், 2016-17-இல் அவ்வகையிலான லாபம் ரூ.298 கோடியாக இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், 2015-16-இல் ரூ.3,836.77 கோடியாக காணப்பட்ட இழப்பு 2016-17-இல் ரூ.5,765.16 கோடியாக உயர்ந்தது என்றார் அவர்.