ஏர்இந்தியா செயல்பாட்டு லாபம் இருமடங்கு உயர்வு

ஏர்இந்தியாவின் செயல்பாட்டு லாபம் கடந்த நிதி ஆண்டில் இருமடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏர்இந்தியா செயல்பாட்டு லாபம் இருமடங்கு உயர்வு

ஏர்இந்தியாவின் செயல்பாட்டு லாபம் கடந்த நிதி ஆண்டில் இருமடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
ஏர்இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிதி நிலைமை மற்றும் செயல்பாடு நிலையான அளவில் மேம்பட்டு வருகிறது. இதற்கு, மத்திய அரசு செயல்படுத்திய சிறப்பு திட்டங்களே முக்கிய காரணம். கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில் அந்த நிறுவனம் செயல்பாட்டு லாபமாக ரூ.105 கோடியை மட்டுமே ஈட்டியிருந்த நிலையில், 2016-17-இல் அவ்வகையிலான லாபம் ரூ.298 கோடியாக இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், 2015-16-இல் ரூ.3,836.77 கோடியாக காணப்பட்ட இழப்பு 2016-17-இல் ரூ.5,765.16 கோடியாக உயர்ந்தது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com