கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை 77% அதிகரிக்க திட்டம்

நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை 77 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை 77% அதிகரிக்க திட்டம்

நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை 77 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
அடுத்த பத்து ஆண்டுகளில் கச்சா எண்ணெய்க்கான தேவை இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேவையை ஈடு செய்யும் வகையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை 77 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், உள்நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் ஆண்டுக்கு 24.76 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இதனை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 41.43 கோடி டன்னாகவும், 2030-ஆம் ஆண்டுக்குள் 43.86 கோடி டன்னாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2016-17-ஆம் நிதி ஆண்டில் கச்சா எண்ணெய்க்கான தேவை 19.37 கோடி டன்னாக இருந்தது. அதேசமயம், சுத்திகரிப்புத் திறன் அதைவிட அதிகமாகவே காணப்பட்டது. 
இருப்பினும், தற்போது கச்சா எண்ணெய்க்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வரும் 2030-ஆம் ஆண்டில் அதற்கான தேவை 33.50 கோடி டன்னாகவும், 2040-இல் 47.20 கோடி டன்னாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை ஈடு செய்ய வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 
தற்போது இருக்கும் ஆலைகளில் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்வதன் மூலமாக சுத்திகரிப்பு திறனை 12 கோடி டன் கூடுதலாக்கவும், பொதுத் துறையில் அமைக்கும் புதிய ஆலைகளின் மூலமாக சுத்தகரிப்பு திறனை 6.9 கோடி டன் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com