பொதுத் துறையைச் சேர்ந்த செயில் (ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) நிறுவனத்தின் பிப்ரவரி மாத உற்பத்தி 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் பி.கே. சிங் தெரிவித்துள்ளதாவது: செயில் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 12.72 லட்சம் டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால அளவில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி அளவுடன் ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் அதிகமாகும். இந்த வளர்ச்சி விகிதம் எட்டப்பட்டதையடுத்து, நிறுவனத்தின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் முடுக்கிவிட திட்டமிடப்பட்டுள்ளன.
நவீனமயப்படுத்தல் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட எஞ்சியிருக்கும் சில திட்டங்களை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவது, புதிய அலகுகளிலிருந்து உற்பத்தியை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுபோன்றவற்றால், மார்ச் மாதத்தில் கணிசமான அளவிலான உற்பத்தி அதிகரிப்பை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.