புதிய திட்டங்களில் கூட்டுப் பங்களிப்பை அதிகரிப்பதில் டொயோட்டா-சுஸுகி தீவிரம்

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்களில் கூட்டுப் பங்களிப்பை மேலும் அதிகரிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களான டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகியவை உறுதிபூண்டுள்ளன.
புதிய திட்டங்களில் கூட்டுப் பங்களிப்பை அதிகரிப்பதில் டொயோட்டா-சுஸுகி தீவிரம்

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்களில் கூட்டுப் பங்களிப்பை மேலும் அதிகரிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களான டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகியவை உறுதிபூண்டுள்ளன.
இதுகுறித்து அந்த இருநிறுவனங்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தொழில்நுட்ப மேம்பாடு, வாகன தயாரிப்பு மற்றும் சந்தை வளர்ச்சி ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்களில் இணைந்து பணியாற்றி பங்களிப்பை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் வெள்ளிக்கிழமை ஒப்புக் கொண்டன.
சுஸுகி நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட மாடல்களை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தயாரித்து இந்தியா முழுவதுமுள்ள அதனதன் பிராண்ட் நெட்வொர்க் மூலம் விற்பனை செய்வதும் புதிய திட்டங்களில் ஒன்றாகும். 
இதைத் தவிர, டொயோட்டா-சுஸுகி நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் தயாரித்த வாகனங்களை ஆப்பிரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளின் சந்தைகளுக்கு அதனதன் விற்பனை நெட்வொர்க்குகள் மூலம் ஏற்றுமதி செய்வதில் இரு நிறுவனங்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்தும் புதிய திட்டத்தின்கீழ் தீவிரமாக பரிசீலிக்கப்படவுள்ளன என்று டொயோட்டா-சுஸுகி அந்த கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com