முதல் பாகம், இரண்டாம் பாகம் என பாக்ஸ் ஆஃபீஸில் மெகா மாஸ்டர் பிளாஸ்டர் ஹிட் அடித்த பாகுபலி திரைப்படத்தைச் சுற்றி பலவிதமான விமர்சனங்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. அவற்றில் சில படத்தைப் பற்றி வானளாவப் புகழ் பாடக் கூடிய வகையிலானவை. அந்த வகையில் பிரபல இந்தி இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆரம்பம் முதலே பாகுபலி படக்குழுவினரை ஆஹா, ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளிக் கொண்டு தான் இருக்கிறார். தமிழ் இயக்குனர்களிலும் பிரமாண்டத்துக்குப் பெயர் போன இயக்குனர் சங்கர், பாகுபலி குறித்து நல்ல விதமாகவே கிரெடிட் கொடுத்து படக்குழுவினரை வாழ்த்தி இருந்தார்.
பாகுபலி திரைப்படம் குறித்து மிக மோசமாக எதிர்மறையாக விமர்சித்து கருத்து தெரிவித்தவர்களில் முக்கியமானவர் இந்தித் திரைப்பட உலக சினிமா விமரிசகர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கமால் கான் சுருக்கமாக கே.ஆர்.கே. இவரது விமரிசனம் மட்டுமே பாகுபலி ரசிகர்கள் பொங்கி எழுந்து திட்டித் தீர்க்கும் வண்ணம் மிக மோசமானதாக இருந்தது. இவர் படத்தின் நாயகன் பிரபாஸை ஒட்டகம் போலிருக்கும் பிரபாஸின் பின்னால் பாகுபலி வெற்றியைக் கண்டு இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வரிசை கட்டி ஓடினால் அது அவர்களது முட்டாள் தனமாக இருக்கும் எனக் கூறி இருந்தார். இப்படி ஒரு சில கடுமையான விமரிசனங்களைத் தவிர்த்து விட்டால் படத்திற்காக குவிந்து வரும் விமரிசனங்கள் அனைத்துமே ஆரோக்கியமானவையே.
தற்போது ‘நானும் ரவுடி தான்’ இயக்குனர் விக்னேஷ் சிவன் பாகுபலி திரைப்படம் குறித்த தனது விமரிசனங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாகுபலியின் 5 முக்கியமான தவறுகளை அவர் பட்டியலிட்டிருக்கிறார். அவை என்னவென்று பார்க்கலாமா?
என பாகுபலி திரைப்படத்தின் 5 பிரதான பிழைகளாக இவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். சிலர் புகழ்வதைப் போல இகழ்வார்கள். ஆனால் இவர் பிழைகள் எனச் சுட்டிக்காட்டியிருப்பவை அனைத்துமே பாகுபலி திரைப்படத்தை இவர் எத்தனை தூரம் ரசித்துப் பார்த்திருக்கிறார் என்று உணர்த்துகின்றன. இந்தப் பிழைகள் அனைத்தும் இயக்குனருக்கு படத்தின் மீது இயல்பாக எழுந்த பெருமித உணர்வை வெளிக்காட்டும் படியாக அமைந்து விட்டன.