இறுதிக் கட்டப் பணிகளில் அறம் செய்து பழகு!

சுசீந்திரன் அடுத்து எழுதி இயக்கி வரும் படம் "அறம் செய்து பழகு.'சந்தீப் கிஷன், விக்ராந்த், துளசி, தாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்கின்றனர்.
இறுதிக் கட்டப் பணிகளில் அறம் செய்து பழகு!

சுசீந்திரன் அடுத்து எழுதி இயக்கி வரும் படம் "அறம் செய்து பழகு.'சந்தீப் கிஷன், விக்ராந்த், துளசி, தாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்கின்றனர். மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ் உள்ளிட்டோர் கதையின் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பார்வையை நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலம் இயக்குநர் சுசீந்திரன் முதன் முறையாக தெலுங்கு சினிமாவில் களம் காண்கிறார். இப்படத்தை அன்னை ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் ஆண்டனி தயாரிக்கிறார். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஜூலை மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com