"தானா சேர்ந்த கூட்டம்' படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. ஜனவரி 1-ஆம் தேதி இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்ற நிலையில், படத்தின் அடுத்தக் கட்டப் பணிகளில் மும்முரம் காட்டத் துவங்கியுள்ளது ட்ரீம் வாரியர் நிறுவனம். இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடந்து வருகின்றன. இசையமைப்பது யார் என்பது குறித்து தீவிரமாக பேச்சு வந்தது. முதலில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பது உறுதி என்று சொல்லப்பட்டது. ஆனால், திடீரென்று இதில் மாற்றம் ஏற்பட்டது. வழக்கமான ஹிட் கூட்டணியான செல்வராகவன் } யுவன் ஷங்கர் ராஜா இணை மீண்டும் இப்படத்துக்காக இணைகிறது. செல்வராகவன் - யுவன் கூட்டணிக்கு எப்போதும் வரவேற்பு இருப்பதால் இப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பெரிதும் பேசப்படும் என்று நம்பப்படுகிறது. முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், பாடல் பதிவு பிப்ரவரியில் தொடங்குகிறது. மே மாத வெளியீடாக படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.