உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு இணையதளம் மூலம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
மத்திய சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் இயக்ககம் கலந்தாய்வை நடத்த உள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 192 இடங்கள் உள்பட நாடு முழுவதும் சுமார் 1,200 இடங்கள் உள்ளன.
கடந்த ஜூன் 10, 11 தேதிகளில் நடைபெற்ற நீட் தேர்வின் அடிப்படையில் சனிக்கிழமை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியிடப்படும். இடங்களைப் பெற்றவர்கள் குறிப்பிட்ட கல்லூரிகளில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.