பத்தாம் வகுப்பு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வெழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் வியாழக்கிழமை (ஆக.17) பிற்பகல் வெளியிடப்படவுள்ளன.

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வெழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் வியாழக்கிழமை (ஆக.17) பிற்பகல் வெளியிடப்படவுள்ளன.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வை எழுதிய 51,035 மாணவர்களில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் எண்ணிக்கை 371 ஆகும். மறுகூட்டல் செய்யப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கை 737 ஆகும். இதில் மதிப்பெண் கூட்டலில் மாற்றம் செய்யப்பட்ட தேர்வர்கள் 16 பேர் ஆவர். மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் பட்டியல் www.dge.tn.gov.in   என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை (ஆக.17) பிற்பகல் வெளியிடப்படும். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இந்தப் பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.
தேர்வர்கள் தங்களது மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண்கள் பதிந்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை வியாழக்கிழமை (ஆக.17) முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com