டான்செட்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட்) விண்ணப்பிப்பதற்கான கால

முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 28 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வைப் பொருத்தவரை, எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர வரும் மார்ச் 25 -ஆம் தேதியும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். படிப்புகளில் சேர மார்ச் 26 -ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க பிப்ரவரி 20 கடைசி நாள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாணவர்களின் நலனைக் கருதி, விண்ணப்பத் தேதியை பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. அதன்படி, வரும் 28 -ஆம் தேதி (பிப்.28) வரை இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை www.annauniv.edu  என்ற இணையதளத்தில் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com