யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வு: தமிழகத்திலிருந்து 210 பேர் தகுதி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) சார்பில் நடத்தப்படும் இந்திய குடிமைப் பணிகள் தேர்வின் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) முதன்மைத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 210 பேர் தேர்வாகியுள்ளனர்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) சார்பில் நடத்தப்படும் இந்திய குடிமைப் பணிகள் தேர்வின் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) முதன்மைத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 210 பேர் தேர்வாகியுள்ளனர்.
முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் என மூன்று நிலைகளில் இந்தத் தேர்வு அடுத்தடுத்து நடத்தப்படுகிறது.
இதில் 2016 ஆகஸ்ட் 7-இல் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை நாடு முழுவதிலும் இருந்து 6.5 லட்சம் பேர் எழுதினர். இதில், 15,900 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இந்த முதன்மைத் தேர்வானது 2016 டிசம்பர் 3 முதல் 9-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில், 2,961 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 210 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மார்ச் 20-இல் தில்லியில் இறுதி சுற்றான நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சி: மனித நேயம் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 112 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதேபோல், மனித நேயம் பயிற்சி மையம் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமி, சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமி உள்ளிட்ட பல்வேறு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com