மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற விரும்பும் கல்லூரி மாணவர்கள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட செய்தி:
மத்திய அரசின் கல்வி உதவித் தொகைகள் அனைத்தும் தற்போது தேசிய கல்வி உதவித் தொகை இணையதளம் (www.scholarship.gov.in) மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கல்வி உதவித் தொகைகளைப் பெற 2015 -ஆம் ஆண்டு தகுதி பெற்ற கல்லூரி மாணவர்கள் சிலரால், 2016 -ஆம் ஆண்டுக்கு அதைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியவில்லை எனத் தெரிய வந்திருக்கிறது.
எனவே, மத்திய கல்வி உதவித் தொகையை 2016 - ஆம் ஆண்டுக்கு புதுப்பிக்க விரும்பும் மாணவர்கள்www.cbse.nic.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்க ஜூலை 5 கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.