தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 50% இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? அரசு பதிலளிக்க உத்தரவு

கடந்த 2000 -ஆம் ஆண்டுக்கு பின்பு, மருத்துவ பட்டமேற்படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனவா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு

கடந்த 2000 -ஆம் ஆண்டுக்கு பின்பு, மருத்துவ பட்டமேற்படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனவா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.காமராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு விவரம்:
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான இடங்களில், 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், தனியார் கல்லூரிகள் அவ்வாறு இடங்களை ஒதுக்கீடு செய்வதில்லை. ஆகையால்,அந்த ஒதுக்கீட்டு இடங்களை பெற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: கடந்த 2000 -ஆம் ஆண்டு முதல் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து மாநில அரசு பெற்ற மருத்துவப் பட்டமேற்படிப்பு இடங்கள் எவ்வளவு, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் எத்தனை இடங்கள் உள்ளன, அவற்றில் எத்தனை இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற்றுள்ளது என்பவை குறித்து ஏப்ரல் 3-க்குள் மாநில அரசு பதிலளிக்க வேண்டும்.
அதேபோன்று, ஆண்டுதோறும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக கண்காணிக்கப்படுகிறதா, அவ்வாறு இடங்களை ஒதுக்காத தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, இல்லை என்றால் அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 3 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com