மே 12 இல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவித்தபடி மே 12-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவித்தபடி மே 12-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில், உயிரியல்- விலங்கியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்களில் பி-வகை வினா எண் 16 மற்றும் ஏ-வகை வினா எண் 14 ஆகியவற்றுக்கு, அவ்வினாக்களை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்று இரு தேர்வர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில், மேற்குறிப்பிட்ட வினாவுக்கு விடையளித்த அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். மதிப்பீட்டுப் பணி நிறைவுற்று இருப்பின் மறுகணக்கீடு செய்து மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கடந்த 28-ந்தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மேற்குறிப்பிட்ட தீர்ப்பாணைக்கு தடையாணை வழங்கி உள்ளது.
எனவே, தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் எந்த பிரச்னையும் இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியான மே 12-ஆம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com