அண்ணா பல்கலை.யில் இன்று உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (மே 20) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் இலவசமாக கலந்து கொண்டு பலன் பெறலாம் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com