கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட கடலூர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டம் 88.74 சதவீதத் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டம் 88.74 சதவீதத் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் ரா.முருகன் தேர்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இதில் 410 பள்ளிகளிலிருந்து தேர்வெழுதிய மொத்த மாணவ, மாணவிகள் 36,835 பேரில் 32,689 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 88.74 சதவீத தேர்ச்சியாகும். மாநிலத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கடலூர் மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.
கடந்த 2015-16-ஆம் கல்வியாண்டில் 89.13 சதவீத தேர்ச்சியால் 29-ஆவது இடத்திலிருந்த கடலூர் மாவட்டம், தற்போது கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவிலும் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கடலூர் மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 18,451 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதில், 15,888 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 86.11 சதவீதமாகும். அதே நேரத்தில் தேர்வெழுதிய 18,384 மாணவிகளில் 16,801 பேர் தேர்ச்சி பெற்று, 91.39 சதவீதத் தேர்ச்சியை பதிவு செய்தனர். இதன் மூலமாக கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
மாவட்டத்தில் தேர்வெழுதிய 410 பள்ளிகளில் 104 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. 2,671 மாணவ, மாணவிகள் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com