மீட்கப்பட்ட, முன்னாள் குழந்தைத் தொழிலாளர்கள் 17 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில், மீட்கப்பட்ட முன்னாள் குழந்தைத் தொழிலாளர்கள் 17 பேர் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதியிருந்தனர். இதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், கே.கிறிஸ்டியன் 419 மதிப்பெண்கள் பெற்றார்.
தேர்ச்சி பெற்றவர்களை தேசியக் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் பாராட்டினார். மேலும், தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் தொடர்ந்து கல்வி பயிலத் தேவையான உதவி, ஆலோசனை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.