மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சார்பில் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில், 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். 'நம் எதிர்கால தலைமுறையினரைக் காப்பாற்றுவதற்கு, அதிக கவனத்துடன் தண்ணீரை பயன்படுத்தவும்' என்ற தலைப்பில் இந்த ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது. மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடைபெறும்.
கூடுதல் விவரங்களுக்கு 044- 24914334, 9600152202 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.