சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பணியிடங்களுக்கு முழுநேர பதிவாளர், முழுநேர தேர்வுக் கட்டுப்பாட்டாளரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், புதிய முழு நேர பதிவாளராக பல்கலைக்கழகத்தின் எகனாமெட்ரிக்ஸ் துறைப் பேராசிரியர் ஆர்.ஸ்ரீநிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பணியிடத்துக்கு தகுதியான நபர்கள் கிடைக்காததால், முழுநேர தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தேர்வு செய்யப்படவில்லை. இதன் காரணமாக, ஏற்கெனவே பணியிலிருக்கும் பொறுப்பு தேர்வுக் கட்டுப்பாட்டாளர் எம்.ஸ்ரீநிவாசன், அந்தப் பதவியில் தொடர்வார் எனப் பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.