'நாடா 2018': விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பி.ஆர்க். கட்டடவியல் பொறியியல் படிப்பில் சேருவதற்கான 'நாடா' நுண்ணறி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பி.ஆர்க். கட்டடவியல் பொறியியல் படிப்பில் சேருவதற்கான 'நாடா' நுண்ணறி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் 30 -ஆம் தேதி வரை இந்தத் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
பி.ஆர்க். படிப்பிகளில் சேர்க்கை பெற 'நாடா' (தேசிய கட்டடவியல் நுண்ணறி தேர்வு) தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இத்துடன், பிளஸ் 2 தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2018 -ஆம் ஆண்டுக்கான 'நாடா' தேர்வை அண்மையில் அறிவித்த கட்டடவியல் கவுன்சில், தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 2 கடைசி என அறிவித்திருந்தது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 30 -ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
பிளஸ் 2 முடித்தவர்களும், தற்போது பொதுத் தேர்வு எழுதுபவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களை www.nata.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com