அரியலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் காலியாக உள்ள 100 தாற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ரஹ்மான் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் 12, கணினி இயக்குபவர் 5, இளநிலை உதவியாளர் 5, தட்டச்சர் 16, நகல் பரிசோதகர் 4, ஓட்டுநர், முதுநிலை கட்டளைப்பணியாளர், ஒளிநகல் பெருக்குநர் ஆகியோர் தலா ஒருவர், அலுவலக உதவியாளர் 40, மசால்ஜி 9, இரவுக்காவலர் 4, துப்புரவுத் தொழிலாளர் 2 என மொத்தம் 100 தாற்காலிக காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 5.5.2017 மாலை 5.45க்குள் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் எற்கப்படமாட்டாது.
விண்ணப்பப்படிவம் மற்றும் இதர விவரங்களை http:ecourts.gov.intnariyalur என்ற இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.