சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம்.
இதில் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 4602 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முதன்மை எழுத்துத் தேர்வு வரும் அக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த தேர்வு முடிவுகள் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.